லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ், தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தெலுங்கு மக்கள் நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி அது பற்றிய கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தன்னுடைய 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அரசியல், சினிமா பற்றி பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
என்டிஆருக்கு பாரத ரத்னா விருதுக்கான கோரிக்கை பற்றி அவரிடம் கேட்ட போது, “எனது அப்பா ஒரு போதும், அதிகாரத்துக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியதில்லை. எனது அப்பாவுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால், யார் அது பற்றி முடிவெடுக்கிறார்களோ, அவர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்ற அன்போடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை,” என கோபமாகப் பேசினார்.
என்டிஆர் மறைந்து 25 வருடங்களாகிவிட்டது. சிலருக்கு மறைவுக்குப் பின்புதான் பாரத ரத்னா வழங்கப்பட்டது. என்டிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை விருதுக்காக பரிசீலிக்கவில்லை என்ற கோபம் தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிகமாக உள்ளது.