தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் மக்கள் அனைவரிடத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதோடு பல நடிகர்-நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து தனது மகனுடன் மாஸ்க் அணிந்த ஒரு செல்பியையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ‛‛நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு வீட்டீர்களா?'' என்றும் பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.