அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

பொதுவாகவே அதிரடியான கமெண்ட்டுகளை தெரிவிப்பதற்கு கொஞ்சமும் தயங்கமாட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகரை கரப்பான்பூச்சி என அவர் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அப்படி அழைக்கும் அளவுக்கு அந்த நடிகர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தான் ஆச்சர்யம்.
விஷயம் இதுதான்.. தமிழில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான கௌரவம் படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். சமீபத்தில் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முந்தைய நாள் தனது மணப்பெண் அலங்காரத்தை, சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார் யாமி கவுதம். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியாகவும் கேலி கிண்டல்களுடனும் கமெண்ட் பண்ணி வந்தனர். சின்னத்திரை நடிகரும் பாலிவுட்டின் குணச்சித்திர நடிகருமான விக்ரம் மாசே என்பவர் இந்த அலங்காரத்தில் யாமி கவுதமை பார்ப்பதற்கு ராதையை போல் இருக்கிறார் என புகழ்ந்து கமெண்ட் கொடுத்திருந்தார்
அந்த பக்கத்தில் பலரது கமெண்ட்டுகளுக்கும் பதில் கமெண்ட் கொடுத்து வந்த கங்கனா ரணவத், விக்ரம் மாசேவின் கமெண்ட்டை படித்துவிட்டு, “எங்கிருந்து திடீரென வந்தது இந்த கரப்பான்பூச்சி.. எடு என்னுடைய செருப்பை..” என்று பதில் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
ஒருவேளை இந்த விக்ரம் மாசே, தனது நண்பர் வட்டாரத்தில் உள்ளவர் என்பதால் அப்படி கூறினாரா, இல்லை, யாமி கவுதமை அவர் புகழ்வது பிடிக்காமல், அப்படி கூறினாரா என்பது தெரியவில்லை.. இருந்தாலும் கங்கனாவின் இந்த கமெண்ட்டுக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்