பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
தற்போது தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை-3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் தில்ராஜு தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இத்தாலியில் நடத்தி விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பியுள்ளனர்.
ராஷி கண்ணா கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் மீண்டும் பரவிக் கொண்டிருந்த நேரம் தான் தேங்க்யூ படப்பிடிப்பிற்காக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றோம். முதலில் இத்தாலிக்கு செல்லவே பயந்தேன். என்றாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் செட்டில் இருக்கும்போது இத்தாலி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது. சீக்கிரம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை நடித்தோம். அப்படி நடித்து முடித்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.