கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
'கயல்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரனும், பிரபல டிவி தொகுப்பாளரான அஞ்சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று வயது ஆண் குழந்தையும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமான பாலோயர்கள் கொண்டவர் அஞ்சனா. டிவி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவர். அவருக்கு ஒரு நபர் தொலைபேசி வழியே தொடர்ந்து அநாகரிகமாக தொல்லை தருவதாக சந்திரனும், அஞ்சனாவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக சந்திரனும், அஞ்சனாவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“சில வருடங்களுக்கு முன்பு இதே போல கடினமான நேரத்தில் தொல்லை இருந்தது, பின்னர் சைபர் கிரைம் மூலமாக பிரச்சினை தீர்ந்தது. அது போலவே இப்போதும் தொல்லைகள். தனிப்பட்ட மெசேஜ்கள் நிறைய வருகின்றன. அவற்றை நான் பிளாக் செய்துள்ளேன். ஆனால், இது இன்னும் அப்படியே இருந்து பயப்பட வைக்கிறது,” என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலர் பொய்யான கணக்குகள் மூலம் பிரபலங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது மனநோயாக உள்ளது. போலியான முகத்தைக் காட்டாத தளங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அவற்றை செய்ய வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்து பலரது விருப்பமாக உள்ளது. அப்படி போலியான கணக்குகள் தடை செய்யப்பட்டால் டுவிட்டர் உள்ளிட்ட தளங்களில் நடக்கும் அருவெறுக்கத்தக்க விஷயங்கள் நிறையவே குறையும்.