புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பல சினிமா பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சில வாட்சப் குழுக்கள், சமூக வலைத்தளங்களில் சிலர் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். படித்தவர்கள் கூட அது பற்றிய குழப்பமான மனநிலையில் உள்ளனர்.
திரையுலகில் தினமும் ஒருவராவது கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்து வருவது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்த நடிகர் வெங்கட் சுபா தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரிதும் தயக்கம் காட்டி உள்ளார். அது பற்றி அவரது 30 ஆண்டு கால நண்பரும், தயாரிப்பாளருமான டி.சிவா கவலையுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் கூட இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மக்கள் அனைவரும் அவரவர் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும், நான் சொல்கிறேன் என்று கூட போட்டுக் கொள்ள வேண்டாம், டாக்டர்களை ஆலோசித்து போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என பல டாக்டர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.