சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வரவேற்பை பெற்றாலும் மிகப்பெரிய சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன், பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரன், வினைய், சூரி உள்பட பலர் நடிக்கடி, இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சத்யராஜ், ‛‛ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய துணிச்சலான விஷயம். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன். மேலும், சூர்யா தனது படங்களில் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவரது ரசிகர்களும் அதை பின்பற்ற வேண்டும். எம்ஜிஆரைப் போன்று திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்றார்.




