23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
அமரர் கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல் போன்றோர் படமாக்க முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து முடித்துவிட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்குவதோடு, லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதமே முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பட பணிகள் முடியவில்லை. இதனால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற செப்., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் லுக்கும் அட்டகாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.