விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சில குடும்பங்களில் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே கொரோனா தொற்று பரவி வீடுகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களால் வீடுகளில் சமைக்கவும் முடியாது. ஹோட்டல்களில் இருந்து வாங்கியும் சாப்பிட முடியாது.
இப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்காக பலர் நியாய விலையில் உணவுகளை வழங்கி வருகின்றனர். அதே சமயம் சில பிரபலங்கள் சேவை மனப்பான்மையில் அவர்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவுகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.
டிவி நடிகை சரண்யா, அவருடைய வீட்டில் சமையல் செய்து அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உணவுகளைக் கொடுத்து வருகிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன். இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
சில நல்ல உள்ளங்கள் இப்படி சில சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.