பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு |
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு நிதியாக வழங்கி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலில் இருப்பவர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் பெப்சி அமைப்புக்கு நிதி வழங்கினர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கினர். அதை முறையாக பிரித்து, பெப்சியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்தார் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அதேப்போல் இந்த முறையும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ஏற்பாடுகளை செய்து வருகிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்நிலையில் பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.