50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
சித்து பிளஸ் 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவன், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
கொரோனா 2வது அலை காலத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வருவதாக முதல்வர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் விதிமுறைகளை மீறி நடக்கும் படப்பிடிப்புகளை தடை செய்யுங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் விதிமுறைகளை மீறி (அன்அபீசியல்) எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.