சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை ரொம்பவே தீவிரமா இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் சவாலாக இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அவர்களை நோயாளிகளாக அனுமதிப்பதற்கு ஏற்ற படுக்கை வசதிகள் கூட பற்றாக்குறையாக இருக்கின்றன.
இந்தநிலையில் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ராதே ஷ்யாம் படக்குழுவினர் படத்திற்காக பிரமாண்டமான மருத்துவமனை செட் ஒன்றை உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை நிலவுவதாக கூறியதை அடுத்து, படப்பிடிப்புக்காக உருவாக்கி வைத்திருந்த 50க்கும் குறையாத படுக்கைகள், ஸ்டாண்டுகள், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளது. படக்குழுவின் இந்த பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.