இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
கொரோனாவின் 2வது அலைக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். நேற்று இயக்குனர் தயாளன் சேவியரும், தயாரிப்பாளர் அந்தோணியும் பலியானார்கள். தயாளன் சேவியர், முரளி, விந்தியா, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக என்ற படத்தை இயக்கினார். பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 56.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் அந்தோணி. சுசீந்திரன் இயக்கத்தில் விதார்த்த நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தை தயாரித்தார். 52 வயதான அந்தோணி நேற்று தூத்துக்குடியில் உள்ள பெற்றோரை பார்க்க சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு கொரோன தொற்று இருந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.