நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட பட நிறுவனம் அறிவித்து விட்டதால் கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத்தில் முகாமிட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பலத்த பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்பயிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சென்னை வரும் ரஜினி, வந்த வேகத்தில் தனக்கான டப்பிங் வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ரஜினி வேகம் காட்டி வருவதால், தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.