டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நாட்டில் கொரோனா தொற்றால் நிலவி வரும் பிரச்சினைகளில் தங்களால் முடிந்த சில சிறு சிறு உதவிகளையும் சினிமா பிரபலங்கள் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் ஒரு வீடியோவையும், தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சுகாசினி மணிரத்னம், மாதவன், துல்கர் சல்மான், விக்ரம் பிரபு, அதர்வா, அரவிந்த்சாமி, ராதிகா சரத்குமார், நாசர் ஆகியோர் கொரோனா பாதுகாப்பு முறை பற்றியும், தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு வீடியோவை இரண்டு தினங்களுக்கு முன்பே வெளியிட்டுள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழில் ராம்சரண், தெலுங்கில் ஆலியா பட், கன்னடத்தில் ஜுனியர் என்டிஆர்,, ஹிந்தியில் அஜய் தேவகன், மலையாளத்தில் இயக்குனர் ராஜமவுலி ஆகியோரும் முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திப் பேசியுள்ளனர்.
அவர்கள் சொல்வது போல நாம் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தியும், தடுப்பூசி அணிந்தும் கொரோனா வருவதைத் தடுப்போம்.




