புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிப்பட்டன. இப்போது புதிய தகவலாக தெலுங்கு சினிமாவில் விஜய் நேரடி என்ட்ரி கொடுக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தை வம்ஷி பைடிபள்ளி என்பவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதுவரை தான் தயாரித்த படங்களை விட இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவும் தில்ராஜூ திட்டமிட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, நாகார்ஜூனா - கார்த்தி நடித்த ஊபிரி (தமிழில் தோழா) போன்ற படங்களை இயக்கி உள்ளார் வம்சி பைடிபள்ளி.