ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிப்பட்டன. இப்போது புதிய தகவலாக தெலுங்கு சினிமாவில் விஜய் நேரடி என்ட்ரி கொடுக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தை வம்ஷி பைடிபள்ளி என்பவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதுவரை தான் தயாரித்த படங்களை விட இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவும் தில்ராஜூ திட்டமிட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, நாகார்ஜூனா - கார்த்தி நடித்த ஊபிரி (தமிழில் தோழா) போன்ற படங்களை இயக்கி உள்ளார் வம்சி பைடிபள்ளி.