ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
நெல்சன் இயக்கும் தனது 65வது படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிப்பட்டன. இப்போது புதிய தகவலாக தெலுங்கு சினிமாவில் விஜய் நேரடி என்ட்ரி கொடுக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தை வம்ஷி பைடிபள்ளி என்பவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதுவரை தான் தயாரித்த படங்களை விட இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவும் தில்ராஜூ திட்டமிட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, நாகார்ஜூனா - கார்த்தி நடித்த ஊபிரி (தமிழில் தோழா) போன்ற படங்களை இயக்கி உள்ளார் வம்சி பைடிபள்ளி.