'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, திமுக., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில், ‛‛நீண்ட காலத்துக்கு பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்'' என பதிவிட்டார்.
இதற்கு ஒருவர், ‛‛சகோதரி முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்'' என பதிவிட்டார். அவருக்கு, ‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து இங்கி பிங்கி போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6வது வகுப்பில் நானும் குடிமக்கள் பற்றி நிறைய படிச்சிருக்கேன். மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை'' என பதிவிட்டார்.
மற்றொருவர் இவர் பதில் கொடுத்ததற்கு, ‛‛மேடம் இன்னும் 5 வருஷத்துல ரெட் ஜெயன்ட் மூவிஸ்,கிளவுட் நயன் மூவிஸ் உள்ளிட்ட இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க'' என பதிவிட்டார். அதற்கு பிரியா, ‛‛ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவீட் போட்டுகிட்டு இருக்கேன்'' என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.