புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல், வர்மா ஆகிய படங்களில் நடித்த ரைசா, சமீபத்தில் கண்களின் கீழே கருத்துப்போய், வீங்கிய முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, பக்க விளைவு காரணமாக தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவரை குற்றம் சாட்டியதுடன் மேலும் தனக்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தோல் மருத்துவர், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர் தான், தனது பெயரையும் புகழையும் கலங்கப்படுத்தியதற்காக தனக்கு மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் அளித்த சிகிச்சையில் இதுபோன்ற பக்க விளைவுகள் முதலில் ஏற்படுவது சகஜம் என்றும் ஒருசில நாட்களில் இவை மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது மது அருந்தாமல், புகை பிடிக்காமல், வலுவான உடற்பயிற்சிகள் செய்யாமல்... என சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா அதை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.