ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் டிவிக்களில் முதல் முறையாக பலரது கவனத்தை ஈர்த்த, பல சர்ச்சைகளை உருவாக்கிய ரியாலிட்டி ஷோ என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைச் சொல்லலாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தான் பலரின் மனங்களைக் கவர்ந்தார். அந்நிகழ்ச்சியில் சுற்றியிருந்தவர்களின் நெருக்கடியை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டே பாதியில் வெளியேறினார். இருந்தாலும் இப்போதும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்றால் ஓவியாவின் ஞாபகம் டிவி நேயர்களுக்கு வந்துவிடும்.
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக 'காமன் டிபி'யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.