ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் டிவிக்களில் முதல் முறையாக பலரது கவனத்தை ஈர்த்த, பல சர்ச்சைகளை உருவாக்கிய ரியாலிட்டி ஷோ என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைச் சொல்லலாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தான் பலரின் மனங்களைக் கவர்ந்தார். அந்நிகழ்ச்சியில் சுற்றியிருந்தவர்களின் நெருக்கடியை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டே பாதியில் வெளியேறினார். இருந்தாலும் இப்போதும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்றால் ஓவியாவின் ஞாபகம் டிவி நேயர்களுக்கு வந்துவிடும்.
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக 'காமன் டிபி'யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.




