ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகரும் செய்யாத உதவியை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். கடந்த வருடம் கொரோனா அலை முதன் முதலாக வந்த போதே பல்வேறு உதவிகளைச் செய்தார். தற்போது இரண்டாவது அலை வந்த போது அவரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சையிலிருந்து வந்த பின் மீண்டும் பழையபடி உதவிகளைச் செய்ய ஆரம்பித்து வருகிறார்.
இந்த அலையில் உதவிகள் கேட்டு வரும் அழைப்புகள் அதிகமாக இருப்பதாக சோனு சூட் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அவருடைய மொபைல் போனில் உதவி கேட்டு வரும் அழைப்புகளை அப்படியே வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக அவருக்கு மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
“உங்களைத் தொடர்பு கொள்ள முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். ஏதாவது தாமதம் என்றாலோ, தவறவிட்டாலோ, மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தித் திரையுலகிலும், தென்னிந்தியத் திரையுலகிலும் கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் அமைதியாக இருக்க, வில்லன் நடிகராக அதிகம் அறியப்பட்ட சோனு சூட் மனிதாபிமான அடிப்படையில் பலருக்கும் உதவி செய்து வருவதற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.




