பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.