துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இந்தியத் திரையுலகில் வரலாற்று வசூல் சாதனை புரிந்த படம் 'பாகுபலி'. இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமௌலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது.
இத் தொடரில் 'ராஜமாதா சிவகாமி' கதாபாத்திரம்தான் முதன்மையான கதாபாத்திரமாக இருக்க கதை உருவாக்கப்பட்டது. அதன்படி தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். வெளியிடத் தயாரான தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பார்த்ததாம். ஆனால், அவர்களது தரத்திற்கு தொடர் இல்லையென முற்றிலுமாக அதை நிராகரித்துவிட்டார்களாம். மீண்டும் படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் தான் மீண்டும் இத் தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம். இப்போது வேறு ஒருவரை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். தொடருக்கான இயக்குனர்களும் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளித் திரையில் சாதனை படைத்த ஒரு படத்திற்கு ஓடிடி திரையில் இப்படி ஒரு நிலைமையா என ஆச்சரியப்படுகிறது திரையுலக வட்டாரம்.