நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

இந்தியத் திரையுலகில் வரலாற்று வசூல் சாதனை புரிந்த படம் 'பாகுபலி'. இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமௌலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது.
இத் தொடரில் 'ராஜமாதா சிவகாமி' கதாபாத்திரம்தான் முதன்மையான கதாபாத்திரமாக இருக்க கதை உருவாக்கப்பட்டது. அதன்படி தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். வெளியிடத் தயாரான தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பார்த்ததாம். ஆனால், அவர்களது தரத்திற்கு தொடர் இல்லையென முற்றிலுமாக அதை நிராகரித்துவிட்டார்களாம். மீண்டும் படப்பிடிப்பை நடத்துங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் தான் மீண்டும் இத் தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம். இப்போது வேறு ஒருவரை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். தொடருக்கான இயக்குனர்களும் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளித் திரையில் சாதனை படைத்த ஒரு படத்திற்கு ஓடிடி திரையில் இப்படி ஒரு நிலைமையா என ஆச்சரியப்படுகிறது திரையுலக வட்டாரம்.