துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இணைந்து தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது-
இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே இப்படம் ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்ற ஒரு தகவல் இருந்தது. தற்போது அதை உறுதி செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாம்.
பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ள இப்படத்தை எப்போது வெளியிட உள்ளார்கள் என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் அறிவிப்பு வரலாம்.
தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகிய காரணத்தால் தியேட்டர்கள் பழையபடி வசூல் நிலைமைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
அதற்குள் சில முக்கிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. ஓடிடியில் வெளியிடப்படும் படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படங்களுக்கு தியேட்டர்கள் வெளியீடு சிக்கல் இருக்கலாம் என்று பலரும் தயங்கினர்.
ஜோதிகா, சூரயா நடித்த படங்கள் ஓடிடியில் வெளியானதால் அவர்களது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று முன்னர் சொன்னார்கள். ஆனால், கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்திற்கு அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. எனவே, அடுத்து பலரும் ஓடிடியில் தங்கள் படங்களை வெளியிட பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.