மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
கொரோனா பரவல் காரணமாக பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. தென்னிந்தியத் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு நகரமாக ஐதராபாத் நகரம் இருந்து வருகிறது. அங்கு தமிழ், கன்னடப் படங்களின் படப்பிடிப்புகளும் அதிகம் நடக்கும்.
கொரோனா பரவல் காரணமாக 50 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவித்துள்ளது. அதோடு கொரோனா பரவல் பயம் காரணமாக மகேஷ்பாபு நடித்து வந்த 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடித்து வந்த 'ஆச்சார்யா' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டப் படைப்பான 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பும் இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா, தொடர்ந்து நடைபெறுகிறதா என படக்குழு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் விஜய் படத்தின் படப்பிடிப்புக் குழுவினர் இருவருக்கும் கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் வேகம் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் விரைவில் முழுவதுமாக நிறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.