கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வென்று ஐந்து லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார். இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, அறிவு, பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் முகேன் ராவ் ஆகியோர் நேரடியாகவும், ஏஆர் ரகுமான் வீடியோ கால் மூலமாகவும் கலந்து கொண்டனர்.
கடைசியாக நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனிக்கும் மற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் சிம்பு. தன்னுடைய 'காரக்குழம்பு' ரெசிபி மூலம் நிகழ்ச்சியில் பேசப்பட்டவர் கனி. போட்டியில் வென்ற கனியை மீண்டும் அவருடைய வீட்டுக்குச் சென்று பாராட்டினார் சிம்பு.
'காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகள் தான் கனி. 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களை இயக்கிய திருவைக் காதலித்து திருமணம் புரிந்தவர்.
சிம்பு அவருடைய நண்பர் நடிகர் மகத், தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோருடன் கனி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிம்பு வந்ததைப் பற்றி, “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை, நிரம்ப நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் இயக்குனர் திரு டுவிட்டரில், ‛‛இன்ப அதிர்ச்சியாக எங்கள் வீட்டிற்கு வந்த சகோதரர் சிம்பு, மகத், ரக்ஷன், சயத்திற்கு நன்றி. கனி வைத்த காரக்குழம்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.