பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற டாக் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனது பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அதனால் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஒட்டி சம்பாதிப்பதாகவும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதை கேட்ட சமந்தா, அப்போதே அவருக்கு ஒரு கார் வாங்கி தருவதாகவும் அதை வைத்து ட்ராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். தற்போது சொன்னபடி செய்தும் காட்டி விட்டார் சமந்தா. ஆம். சுமார் 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக அளித்து, அவரது வாழ்க்கையில் புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் சமந்தா. அவரது இந்த உதவும் குணம் பற்றித்தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக இருக்கிறது.