வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் | பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி' |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் 'ஹே சினாமிகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளத்தில் ஏற்கனவே பல படங்களில் அவர் பாடியிருந்தாலும், தமிழில் இதுதான் அவர் பாடும் முதல் பாடல். மதன் கார்க்கி இந்த பாடலை எழுத, '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடியது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “இதுபோன்ற பாடல் கிடைத்தற்கு நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.