இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் 'ஹே சினாமிகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளத்தில் ஏற்கனவே பல படங்களில் அவர் பாடியிருந்தாலும், தமிழில் இதுதான் அவர் பாடும் முதல் பாடல். மதன் கார்க்கி இந்த பாடலை எழுத, '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடியது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “இதுபோன்ற பாடல் கிடைத்தற்கு நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.