‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 அன்று தொலைக்காட்சியில் வெளியான படம் மண்டேலா. இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோ தயாரித்தது. இந்நிலையில் மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை அடுத்து இப்படத்தை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, படநாயகன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஷ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




