ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார். விஜய்யின் 65வது படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி. தற்போது பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', ராம்சரண் ஜோடியாக 'ஆச்சார்யா', விஜய் ஜோடியாக தமிழில் என டாப் படங்களின் ஹீரோயினாக இருக்கிறார்.
அடுத்து அவரை தெலுங்கு, தமிழில் மேலும் புதிய படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம். அதனால், தன்னுடைய சம்பளத்தை இன்னும் கூடுதலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்க உள்ள படத்திற்காக அவரை அணுகிய போது பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் கேட்டாராம். அதற்கு அவர்களும் சம்மதித்து ஒப்பந்தம் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் மிக வேகமாக பூஜா ஹெக்டேதான் முன்னேறி வருகிறார் என்கிறார்கள்.