அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சென்னை : கொரோனாவிற்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்ட நடிகர் பார்த்திபன் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் உரிய சிகிச்சைக்கு பின் அவர் தேறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்த நிலையில், அவர் ஓட்டு போடவில்லை. இதுகுறித்து சமூகவலைதளஙகளில் கேள்வி எழுப்பியவர்களுக்கு அவர் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை கோவிட்19 தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டது. மருத்துவருக்கு போட்டோ எடுத்து அனுப்பி சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்பதிவை அவர் அழித்துள்ள நிலையில், ‛தனக்கு அலர்ஜி இருப்பதாலேயே பாதிப்பு ஏற்பட்டது. இது அனைவருக்கும் ஏற்படாது. எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படும். அதனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.