டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில், பிரபல மலையாள நடிகரான மம்முட்டி, வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியும், மம்முட்டியும் தளபதி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். நட்பின் அருமையைப் பேசும் அந்தப் படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தார்கள்.
அதை வைத்து தளபதி பட பாணியில் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்டில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” எனப் பதிவிட்டுள்ளார்.