கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி |
கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது, ஒரு காலத்தில் கே.ஆர்.விஜய் போன்று கையெடுத்து கும்பிடுவது போல் இருப்பவர்களை கடவுள் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு கைதட்டி கூப்பிடுவது போல் உள்ள நடிகைகளை கடவுள் வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்று நயன்தாராவை குறித்து சர்ச்சையாக பேசினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நயன்தாரா குறித்து ஒரு மேடையில் பேசியிருக்கிறார். அதில், ‛‛நயன்தாரா என்ற நடிகையைப்பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகையில் அதை பெருசாக்கி விட்டார்கள். நானும் சரி பேசினேன் என்று வைத்துக் கொள் என்று கூறிவிட்டேன். உடனே திமுகவில் பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி. அதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம் என்றார்கள். ஆனால் நான் அது என்ன தற்காலிகம், நிரந்தமாகவே போகிறேன் என்று நானே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நயன்தாரா என்ன திமுகவில் கொள்கை பரப்பு செயலாளரா? என்ன உறவு உங்களுக்கு? உதயநிதிக்கும், அதுக்கும் உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்யுறது?'' என்று காரசாரமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.