காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இசை அமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. அடுத்ததாக பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கோடியில் ஒருவன் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.
இதற்கிடையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனை 8 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான பாராட்டுகளை பெற்ற விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்குகிறார்.
விடியும் முன் படத்தில் பூஜா நடித்திருந்தார். ஒரு குழந்தையை காப்பாற்ற ஒரு இரவில் போராடும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, விடியும் முன். தற்போது பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக இறுதிசுற்று ரித்திகாசிங் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது. 25 நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாளில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.