கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் |
இசை அமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. அடுத்ததாக பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கோடியில் ஒருவன் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.
இதற்கிடையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனை 8 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான பாராட்டுகளை பெற்ற விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்குகிறார்.
விடியும் முன் படத்தில் பூஜா நடித்திருந்தார். ஒரு குழந்தையை காப்பாற்ற ஒரு இரவில் போராடும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, விடியும் முன். தற்போது பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக இறுதிசுற்று ரித்திகாசிங் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது. 25 நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாளில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.