சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
கொலை கொலயாக முந்திரிக்கா, வல்லமை தாராயோ, மூணே மூணு வார்த்தை படங்களை இயக்கிய மதுமிதா அடுத்து இயக்கிய படம் கேடி என்கிற கருப்புதுரை. வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு முதியவரின் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஒரு சிறுவனின் கதை.
இந்த படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய விருதுகள் எதிர்பார்தேன். இது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛கேடி என்கிற கருப்புதுரையின் பயணம் இனிமையானது. அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி. தேசிய விருதுகளில் இன்னும் கூடுதலான விருதுகளை பெறாததில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் குழந்தைகள் தகுதியானவர்கள் தான்'' என்று எழுதியிருக்கிறார்.