மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடர் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக கடந்துள்ளது. கோலங்கள் போல மெஹா ஹிட் தொடராக இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திடீரென கிளைமாக்ஸை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்த நாயகி மதுமிதா, எதிர்நீச்சல் தொடர் முடியப்போவதை குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'எல்லோருக்கும் இது இதயம் நொறுங்கும் தருணம், ஆனாலும் எது நடந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து தான் போக வேண்டும். வித்யா, திருச்செல்வம் ஆகியோருக்கு மிக்க நன்றி. ஜனனி போன்ற முக்கியமான ரோலை என்னை நம்பி கொடுத்ததற்கு. என்னுடைய சக நடிகர்களுக்கும் குழுவினருக்கும் நன்றி' என அதில் தெரிவித்துள்ளார்.