ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடர் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக கடந்துள்ளது. கோலங்கள் போல மெஹா ஹிட் தொடராக இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திடீரென கிளைமாக்ஸை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்த நாயகி மதுமிதா, எதிர்நீச்சல் தொடர் முடியப்போவதை குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'எல்லோருக்கும் இது இதயம் நொறுங்கும் தருணம், ஆனாலும் எது நடந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து தான் போக வேண்டும். வித்யா, திருச்செல்வம் ஆகியோருக்கு மிக்க நன்றி. ஜனனி போன்ற முக்கியமான ரோலை என்னை நம்பி கொடுத்ததற்கு. என்னுடைய சக நடிகர்களுக்கும் குழுவினருக்கும் நன்றி' என அதில் தெரிவித்துள்ளார்.