புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்தைத் தவிர வேறு எந்த ஒரு படத்திற்கும் மக்கள் வரவில்லை. மிக மிகக் குறைவான அளவில் தான் சில குறிப்பிட்ட படங்களைப் பார்த்தார்கள்.
இந்நிலையில் மக்கள் வராத காரணத்தால் நாளுக்கு நாள் பல தியேட்டர்களை மூடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அவர்கள் தியேட்டர்கள் அமைந்துள்ள சென்னை - தி.நகர், மதுரவாயல், நாவலூர், வில்லிவாக்கம் ஆகிய தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகபட்சமாக 100 ரூபாயும், திண்பண்டங்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியையும் அறிவித்துள்ளார்கள்.
அப்படியான சலுகைகளைக் கொடுத்தாலாவது மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஒரு தியேட்டரில் இப்படி சலுகை கொடுக்க முடிகிறதென்றால் மற்ற தியேட்டர்களிலும் இப்படி ஒரு சலுகை அறிவிக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
டிக்கெட் கட்டணங்களைக் கூட மக்கள் ஓரளவிற்கு தாங்கிக் கொள்வார்கள். ஆனால், வெளியில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பாப்கார்ன்களை தியேட்டர்களில் 100, 150, 200 என தியேட்டர்களுக்கு ஏற்றபடி விற்பதுதான் அவர்களை எரிச்சலடைய வைக்கிறது. மற்றும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், படம் பார்க்கும் டிக்கெட் கட்டணத்தை விடவும் அதிகமாக இருக்கும்.
ஒரு பக்கம் கொரோனா பயம், மறுபக்கம் ஓடிடியில் வந்த தாக்கம், இவற்றைச் சமாளிக்க தற்போது சலுகைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதை நிரந்தரமாக்கினால் மட்டும் தான் மக்களை மீண்டும் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும் என சிலர் கருதுகிறார்கள். அதற்கு அனைத்து சங்கங்களும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு காண வேண்டும் என திரையுலகத்தில் உள்ளவர்களே வலியுறுத்துகிறார்கள்.