ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஓசூர்: கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில், என, மிருகம் படத்தின் நடிகர் ஆதி கூறினார்.
இது குறித்து, ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு என் ஆதரவு உண்டு. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். யார் வருவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என் ரசிகர்கள், யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். எல்லோரும் முன்பு போல் இல்லை; மிகவும் தெளிவாக உள்ளனர்.
யார் நல்லது செய்கிறார்கள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியும். கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில். சினிமா துறையில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். தற்போது தமிழில், கிளாப், பாட்னர், தெலுங்கில், குட்லக் சகி ஆகிய படங்கள் நடித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.