பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் என்ன தான் பிரபலமானவர்களாக, திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான சம்பளம் என்பது ஹீரோக்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் சமந்தா.
அவர் கூறுகையில், ''நடிகைகளுக்கு சம்பளம் என்பது குறைவான அளவே தரப்படுகிறது. ஒரு நடிகை முதல் மூன்று நடிகைகளில் ஒருவராக முன்னணியில் இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. அந்த சம்பளமானது முதல் 20 நடிகர்கள் பட்டியலில் இல்லாத நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட குறைவானதாகவே உள்ளது. இதை சுட்டிக்காட்டி நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்கள் படத்துக்குப்படம் கோடிகளை உயர்த்தினாலும் மறுபேச்சு பேசாமல் கொடுக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று தனது கருத்தினை துணிச்சலாக தெரிவித்துள்ளார் சமந்தா.