25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தற்போது பொன்னியின் செல்வன் என்கிற பிரமாண்ட சரித்திர படத்தை இயக்கி வரும் மணிரத்னம், அதற்கு இடையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக நவரசா என்ற அந்தாலஜி படம் ஒன்றை தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை, 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இதில் வரும் 9 கதைகளை மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன் ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரதீந்திரன் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் மும்முரமாக இருப்பதால் இந்த படத்தின் பணிகளில் தொய்வு ஏற்படவே பொன்ராம் விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது கே.வி.ஆனந்தும் விலகி விட்டார் அவருக்கு பதிலாக சாய்வசந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இயக்கத்தில் அருவி படத்தில் அதிதி பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடக்க இருக்கிறது.