கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. விபிஎப் கட்டண விவகாரம், ஆன்லைன் முன்பதிவுக் கட்டண விவகாரம், பைரசி இணையதளங்கள் என பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினகளால் சுழன்று கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தாக்கத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாமல் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து சினிமாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்காமல் தயாரிப்பாளர் சங்கங்கள் தற்போது மோதல் போக்கைக் கையில் எடுத்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குக் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம். அதற்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக இரண்டு சங்கங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகில் உள்ள மற்ற சங்கங்களில் முக்கிய சங்கமான நடிகர் சங்கமும் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நடந்து முடிந்தும் வாக்கு எண்ணிக்கை நடக்காமல் இருக்கிறது. மற்றொரு சங்கமான தயாரிப்பாளர் சங்கத்திலும் எப்போதும் மோதல் போக்கே நிலவுகிறது. இந்த இரண்டு சங்கத்திலும் நடக்கும் விஷயங்களால் தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.
ஆனால், மூத்த உறுப்பினர்களோ நமக்கு என்ன வந்தது என ஒதுங்கியே இருப்பதாக மற்றவர்கள் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லா சங்கத்திலும் அரசியல் நுழைவதே அதற்கு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த சினிமா பிரமுகர் ஒருவர்.