என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக “மாஜா” என்ற தளத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ளார். இதில் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) என்ற பாடல், பிரபல பாடகி தீ குரலில் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது.
தீ கூறுகையில், ஒரு நிகழ்வில் பேசுவதற்கு எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வரும் ஆட்களில் நானும் ஒருவர். தென்னிந்தியாவின் திறமைமிக்க சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க, புதிய தளத்தை அறிமுகப்படுத்திய மாஜாவுக்கு நன்றி. அமித்தின் (Studio MOCA) அற்புதமான வேலைக்கு நன்றி. உலகின் சிறந்த கலைஞர்களில் ஒருவர் அறிவு. என் தந்தை என்பதை விட, மற்றொரு கலைஞராக சந்தோஷ் நாராயணன் உடன் பணியாற்றுவதில் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த பாடல் பா.ரஞ்சித்தின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. என் அம்மா தான் என் கடவுள். என்னை ஒரு கலைஞராக்குவதில் அவர் பெரும் அர்ப்பணிப்பை தந்துள்ளார் என்கிறார்.
பாடலாசிரியர் அறிவு கூறுகையில், ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால் இன்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, எனது பாடல் மிகப்பெரும் வெளியீட்டு நிகழ்வில் வெளியாகிறது. இப்படியான தளத்தை உருவாக்கிய மாஜாவிற்கும், இதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி. சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாக சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப்பார் என்றார்.
இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர்கள் மணிகண்டன், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், சுதா கொங்குரா, இசையமைப்பாளர்கள் தேவா, சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.