புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்க உள்ளார். நாளை மாலை, சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருப்ப மனு கொடுத்தவர்களிடம், இன்று முதல், நேர்காணல் நடத்தி வரும் கமல், வரும், 7ம் தேதி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். இந்நிலையில், காலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து, டுவிட்டர் பக்கத்தில் கமல், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். என் மீது மட்டுமின்றி, பிறர் மீதும் அக்கறை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது, உடல் நோய்க்கு தடுப்பூசி; அடுத்த மாதம், ஊழல் நோய்க்கு தடுப்பூசி... தயாராகி விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
![]() |
கமல் தவிர்த்து ராதிகா, லதா, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நடிகை வரலட்சுமியின் தாயாரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
![]() |