நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சமீபத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸை கூட தான் முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-3 குறித்து வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.