பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இந்த வாரம் மார்ச் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் பெற்ற 1.24 கோடி கடனை படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னம் தராததால் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக படத்தை வெளியிட நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
கடைசி நேரத்தில் பெற்ற தடையால் இப்போது படம் வெளியாகுமா ஆகாதா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1.24 கோடி தான் என்பதால் எப்படியும் அதை அடைத்து படத்தை வெளியிட முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது.
ஏற்கெனவே சில வருடங்களாக முடங்கியிருந்த படம் இப்போதாவது வருகிறதே என செல்வராகவன் ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இப்போது தடை என்ற தகவலால் வருத்தமடைந்துள்ளனர். படம் வெளியாக யார் பஞ்சாயத்து செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.