எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
சினிமா நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களாகப் பலரும் இருப்போம். ஆனால், தீவிர ரசிகர், வெறித்தனமான ரசிகர் என சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் என்ன செய்வார்கள், தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் கட் அவுட் வைப்பார்கள், பாலாபிஷேகம் செய்வார்கள். சரி, நடிகர்களுக்கு அப்படிச் செய்துவிடலாம், நடிகைகளுக்கு என்ன செய்வது ?.
ஒரு வெறித்தனமான ரசிகர், செய்தது என்ன தெரியுமா ?. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடித்த 'பொகரு' படம் சமீபத்தில் வெளிவந்தது. அதற்காக படத்தின் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த பேனரில் இருக்கும் ராஷ்மிகாவுக்கு அவரது தலையில் இரண்டு முழம் மல்லிகைப்பூ வைத்து பூச்சூடி மகிழ்ந்திருக்கிறார் ஒரு ரசிகர்.
அவர் அப்படிச் செய்த வீடியோவை ரசிகர் ஒருவர் பதிவிட்டு ராஷ்மிகாவுக்கும் டுவிட்டரில் டெக் செய்துள்ளார். அதற்கு ராஷ்மிகா 'ஹார்ட்டின்' எமோஜி போட்டு பதிலளித்திருக்கிறார். இப்படியான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமா, அதிர்ச்சியா ?.