கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி7ம் தேதி அன்று தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், பிப்ரவரி11-ந்தேதி அன்று சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டதாகவும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில், சூர்யாவிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக ஒரு மகிழ்ச்சி செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.