Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோட்டைக்கு வரணும்னுகிற ஆசை இருக்கு : கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன்

20 பிப், 2021 - 08:38 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-and-other-celebrities-got-Kalaimamani-awards

நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், நடிகையர் சவுகார் ஜானகி, சரோஜாதேவி, பின்னணி பாடகியர் பி.சுசீலா, சுஜாதா, பாடகர் சிக்கில் குரு சரண், கடம் வித்வான் திருப்பனந்தாள் மாரிமுத்து, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, தயாரிப்பாளர் தாணு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உட்பட, 130 பேர், தமிழக அரசின் கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று(பிப்., 20) மாலை இவர்களுக்கான விருதை கோட்டையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினர்.



கலைமாமணி விருது பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன் : மகிழ்ச்சியான தருணம். இங்கு நிற்க காரணமான தமிழக மக்களுக்கும், இந்த விருதை கொடுத்த அரசுக்கும், முக்கியமாக எனது பெற்றோருக்கும் நன்றி சொல்கிறேன். விருது ஊக்கம் தருகிறது. இன்னும் நிறைய நல்ல படங்களை தரணும் என்கிற எண்ணம் எழுந்துள்ளது. முதல்முறையாக கோட்டைக்கு வந்துள்ளேன். சாதாரண குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் இங்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். மக்கள் பிரதிநிதியாக வரணும் என்கிற ஆசையில்லை.



சினிமாவில் கதாநாயகன் ஆவேன் என்று ஆசைப்பட்டது இல்லை. சினிமாவில் இருக்க ஆசைப்பட்டேன். இன்று விருது வாங்கும் அளவுக்கு வந்துள்ளேன். இந்த விருதுக்கு இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதைத்தாண்டி வேறு ஒன்றும் யோசிக்கவில்லை. என்னாலும் சாதிக்க முடியும் என்றால் எல்லோராலும் சாதிக்க முடியும். சமூகபிரச்னைகள் நிறைய இருக்கும் அது படங்கள் வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் ஏதோ எனக்கு தெரிந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்றார். விவசாயம் தொடர்பான பிரச்னை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பதில் கூற மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.



தாணு, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மதுமிதா, சங்கீதா, ஜாக்குவார் தங்கம், ஐசரி கணேஷ், டி.இமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று விருதுகளை பெற்று சென்றனர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடுகங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு ... ஹேஷ்டேக் விவகாரம் : ஓவியா பதிலடி ஹேஷ்டேக் விவகாரம் : ஓவியா பதிலடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in