மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
களவாணி படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய ஓவியா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். அதன்பிறகு களவாணி-2 உள்ளிட்ட சில படங்ளில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்ததையொட்டி சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரன்டிங் ஆனது. அதை யடுத்து ஓவியாவும் தனது டுவிட்டரில் கோ பேக் மோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் நடிகை ஓவியாவிற்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேல் ஓவியா எப்போது சென்னை வந்தாலும் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.