ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
களவாணி படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய ஓவியா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். அதன்பிறகு களவாணி-2 உள்ளிட்ட சில படங்ளில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்ததையொட்டி சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரன்டிங் ஆனது. அதை யடுத்து ஓவியாவும் தனது டுவிட்டரில் கோ பேக் மோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் நடிகை ஓவியாவிற்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேல் ஓவியா எப்போது சென்னை வந்தாலும் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.