துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என் ஆளோட செருப்ப காணோம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விவாரணை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் அலாவுதீனும் அற்புத கேமராவும், டைட்டானிக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சாக்ரடீஸ் என்ற உதவி டைரக்டரை ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ், மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீனின் மைத்துணர். அவரிடம் உதவி டைரக்டராக பணியாற்றி வருகிறார். ஆனந்தி தான் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது திருமணம் செய்து கொண்டது பற்றி கூறியதாவது:
சாக்ரடீஸ் குடும்பமும், எங்கள் குடும்பமும் கடந்த பல வருடங்களாக நெருக்கமான குடும்பம். நாங்கள் நட்பாக பழகினோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. எங்கள் குடும்பத்தினர்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். உரிய வயதில் திருமணம் செய்து கொள்வது எனது தனிப்பட்ட விஷயம். அதனால்தான் அதனை உறவினர்களை வைத்து முடித்துக் கொண்டோம்
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். பொதுவாக திருமணத்திற்கு பிறகு அதிக வாய்ப்புகள் வராது என்பார்கள். எனக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. என்கிறார் ஆனந்தி.