மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். இதுவரையிலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.