தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். இதுவரையிலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.